90 வயதில் வாக்களிக்க வந்த.. பாடகி சுசீலாவுக்கு ஏமாற்றம்! அதிகாரிகளின் பதிலால் அப்செட்!
சென்னை: பாடகி சுசீலா நேற்று வாக்களிக்க வந்திருந்த நிலையில், அவரது வாக்கை ஏற்கனவே முத்திரை குத்தி அனுப்பிவிட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதனால் சுசீலா மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க சுசீலா வந்திருக்கிறார். தற்போது இவருக்கு 90 வயதாகிறது. இருப்பினும், உடல்நல பாதிப்புகளை பொருட்படுத்தாமல், ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்திருக்கிறார்.

சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக அவர் சென்றபோது, உங்கள் வாக்கு ஏற்கனவே முத்திரை குத்தி அனுப்பப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
"இத்தனை ஆண்டுகளாகத் தவறாமல் வாக்களித்து வருகிறேன். இந்த வயதிலும் ஆர்வத்துடன் வந்த எனக்கு, அதிகாரிகளின் பதில் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இது பற்றி யாரிடம் புகார் அளிப்பது என தெரியவில்லை" என்று சுசீலா வேதனை தெரிவித்திருக்கிறார்.
சுசீலா மூத்த குடிமகள் என்பதால், அவரிடமிருந்த தபால் வாக்கு பெற, சில நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். ஆனால், தான் நேரில் வந்து வாக்களிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் வாக்குச்சாவடிக்கு வந்த பின்னர், அவரது வாக்கு ஏற்கெனவே முத்திரை குத்தி அனுப்பப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் சொன்னதால் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இவரது வாக்கை அதிகாரிகள் போட்டுவிட்டார்களா? அல்லது.. வெறுமென முத்திரை மட்டும் குத்தி அனுப்பப்பட்டுவிட்டதா? என்பது தெரியாமல் சுசீலா அதிருப்தியடைந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications