இனி கிராம அளவிலும் மழை குறித்த அப்டேட்.. இந்திய வானிலை ஆய்வு மையம்.. எப்படி பார்க்கனும் தெரியுமா?
சென்னை: மாவட்ட வாரியாக மட்டுமே மழை குறித்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில், இனி பஞ்சாயத்து வாரியாக மழை குறித்த அப்டேட்டை தெரிந்துகொள்ள முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை காலத்தில் எப்போது மழை பெய்யும்... கனமழையாக இருக்குமா? அல்லது மிதமான மழையாக இருக்குமா? என்பது குறித்த அப்டேட்களை தினம் தோறும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. மாவட்ட அளவிலான அறிவிப்புகளை தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினாலும் சரி.. புயல் உருவானாலும் சரி.. வானிலை குறித்த அப்டேட்கள் அவ்வப்போது மக்களுக்கு ஆய்வு மையத்தால் தெரியப்படுத்தப்படும்.
தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இந்த வானிலை குறித்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் காலநிலை மாற்றத்தால் எற்படும் பேரிடர்கள் பெருமளவில் குறைக்கப்படவும் இந்த வானிலை முன்னறிவிப்பு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது 150 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.

அதைக் கொண்டாடும் விதமாக இனி பஞ்சாயத்து அளவிலும் வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்ய உள்ளது. இந்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி தவிர தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் கிடைக்க உள்ளது. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை செல்போன்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் எந்த ஊருக்கு வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பின் கோடு எண்ணை குறிப்பிட்டால் போதுமானது. மழை பற்றிய தகவல் மட்டும் இன்றி காற்றின் வேகம் எந்த அளவு இருக்கும். வெப்ப நிலை, ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுஞ்சய் மோஹபத்ரா கூறியதாவது:-
அடுத்த வாரம் முதல் பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்க இருக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பருவமழை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை கணிசமாக குறைக்க உதவும். இந்தியாவின் தொழில் நுட்ப வல்லமை மூலம் பஞ்சாயத்து அளவிலான கணிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடும் ஆற்றல் சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications