பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.. பீதியில் திரண்ட வாகன ஓட்டிகள்.. ஆந்திராவில் 400 பங்குகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீதி அடைந்து வாகன ஓட்டிகள் பலரும் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர். இதனால், ஆந்திராவில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களும் அணிவகுத்து நின்றன. திடீரென குவிந்த வாகன ஓட்டிகளால், ஆந்திராவில் பல்வேறு பங்குகளில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 421 பங்குகள் மூடப்பட்டன.

ஈரான் - அமெரிக்கா போரின் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த வழியாகத்தான் நடப்பதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Panic Buying Shuts Over 400 Petrol Pumps in Andhra Pradesh Amid Fuel Surge

எரிவாயு தட்டுப்பாடு வதந்தி

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் சமையம் சிலிண்டர் விநியோகம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் இன்னமும் நெருக்கடி நீடிப்பதால் ஹொட்டல்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே, பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு என அவ்வப்போதும் கிளம்பும் வதந்திகளால் எரிவாயு நிலையங்களில் வாகன ஓட்டிகள் திரளும் நிலையை சில நேரங்களில் காண முடிகிறது.

421 பங்குகள் மூடப்பட்டன

அந்த வகையில், ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீதி அடைந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர். இதனால், ஆந்திராவில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களும் அணிவகுத்து நின்றன. டேங்குகளை புல் செய்து கொண்டதையும் பார்க்க முடிகிறது.

திடீரென குவிந்த வாகன ஓட்டிகளால், ஆந்திராவில் பல்வேறு பங்குகளில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 421 பங்குகள் மூடப்பட்டன. மொத்தம் 4,501 பங்குகள் மாநிலத்தில் உள்ள நிலையில், 421 பங்குகள் தற்காலிக மூடப்பட்டன. எண்ணெய் விநியோயகம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பீதியில் வாங்கியதால் பல பெட்ரோல் பங்குகளில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.

ஒரே நாளில் 10 ஆயிரம் கிலோ லிட்டர் விற்பனை

மேலும், சாதாரணமாக ஒரு நாளைக்கு 6,330 கிலோ லிட்டர் பெட்ரோலும் 9,408 கிலோ லிட்டர் டீசலும் விற்பனை செய்யப்படும். எனினும், பற்றக்குறை ஏற்பட்டு இருப்பதாக கவலை அடைந்து தேவை அதிகரித்ததால், நேற்று ஒருநாளில் மட்டும் 10,345 கிலோ லிட்டர் பெட்ரோலும், 14,156 கிலோ லிட்டர் டீசலும் விற்றன. விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பால் எரிவாயு நிலையங்களில் ஸ்டாக்குகள் தீர்ந்தன. விநியோகம் அதிகரிக்கப்பட்ட போதிலும் பீதியில் அதிக அளவில் வாங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+