பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் அளித்த அரசாணை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்களம் கிராமத்தில் எனக்கு 169 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பட்டா நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் என்னுடைய நிலத்தை கையகப்படுத்துவதாக விளக்க நோட்டீசை மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி எனக்கு அனுப்பி உள்ளார்கள். நிலத்தை கையகப்படுத்துவதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தும், அதை அவர் நிராகரித்துள்ளார். சிறப்பு வருவாய் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராஜசேகர், "நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு வருவாய் அதிகாரி நோட்டீஸ் வழங்க அதிகாரமே கிடையாது. கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அந்த அதிகாரம் மாவட்ட கலெக்டருக்குதான் உள்ளது" என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் சதீஷ் பெருமாள், மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு இந்த அதிகாரத்தை வழங்கி 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையை தாக்கல் செய்திருந்தார். அந்த அரசாணையில், நிலத்தை கையகப்படுத்த சிறப்பு வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. உடனே மனுதாரர் தரப்பு வக்கீல், ''இந்த அரசாணையிலும் விதிமீறல் உள்ளதால், இதை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2021-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதித்து விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications