அப்போ.. துக்ளக் அடுத்த இதழ் 'சேல்ஸ்' பிச்சிக்குமோ.. குருமூர்த்தி வெளியிட்ட ஒரு 'முக்கிய' அறிவிப்பு
சென்னை: ரஜினிகாந்த் பேசியதால் மறுபடியும் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில், பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பான செய்தியை வரும் இதழில் மறுபிரசுரம் செய்ய உள்ளோம் என்று, அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராமர் மற்றும் சீதை படங்கள் பெரியார் நடத்திய ஊர்வலத்தில், செருப்பால் அடிக்கப்பட்டதாக, ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பெரியாரிய இயக்கங்கள் தெரிவித்து வருகின்றன.

50 ரூபாய்
அதேநேரம், இது தொடர்பான செய்தி வெளியிட்டதற்காக துக்ளக் இதழ் விற்பனை அப்போதைய திமுக ஆட்சியால் முடக்கப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். கள்ளச்சந்தையில் துக்ளக் இதழை வாசகர்கள் படிக்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்ததாகவும், எனவே ஒரு இதழ் 50 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆனதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஆர்வம்
இந்த நிலையில்தான், அந்த துக்ளக் இதழில், அப்படி என்னதான் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியாகி இருந்தது? மற்றும் என்ன புகைப்படம் வெளியாகி இருந்தது? என்பதை அறிந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிந்தது. சமூக வலைதளங்களில் அந்த இதழை மறுபடியும் மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன.
|
குருமூர்த்தி அறிவிப்பு
இந்த நிலையில், இதுபற்றி குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும்படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலவச விளம்பரம்
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுக ஆட்சியில் துக்ளக் பத்திரிகைக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டது.., எனவே துக்ளக், வெகு பிரபலமாக மக்களிடம் சென்று சேர்ந்ததால், தனது விளம்பர பிரதிநிதி போல கருணாநிதி செயல்பட்டார் என்று சோ கிண்டலாக குறிப்பிட்டார் என்று தெரிவித்திருந்தார். சோ ராமசாமி மறைவிற்குப் பிறகு துக்ளக் விற்பனை சரிவடைந்து வந்ததாக சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் தயவால் மீண்டும் துக்ளக் பற்றிய பேச்சு பொதுவெளியில் அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த செய்தி தொடர்பாக மறுபடியும் மறுபிரசுரம் செய்ய துக்ளக் முன்வந்திருப்பதால் அடுத்த இதழ் கண்டிப்பாக அமோக விற்பனை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications