நள்ளிரவுக்கு பின் பஸ்களை கேட்டால் எப்படி? கிளாம்பாக்கம் பயணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அட்வைஸ்
சென்னை: கிளாம்பாக்கத்தில் இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் சேவை இருக்கும் என்ற எண்ணத்தில் சிலர் வந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் வந்து கொண்டு பேருந்துகளை கேட்பது என்பது எப்படி சாத்தியம் என்பதை அவர்களே உணர வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிளாம்பாக்கத்திற்கு வாரம் ஒருமுறை நானும் அமைச்சர் சேகர் பாபுவும் வந்து கொண்டு இருக்கிறோம். இங்கு என்ன தேவை இருக்கிறது என்ற கருத்துக்களை கேட்டு அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை பற்றி சந்தேகம் எழுப்பப்படுகிறது.

அதிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட செய்தியை தொடர்ந்து சொல்லி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரச்சினை என்று பூதாகரம் ஆக்குகிறார்கள். இதை தெளிவுப்டுத்த விரும்புகிறேன். மதுராந்தகம் அருகே ஒரு விபத்து ஏற்பட்டதால் அந்த பேருந்துகள் குறித்த நேரத்தில் இங்கு வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது. அன்று கூடுதலான பெருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
12 மணிக்கு மேல்: ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், வந்து சேர வேண்டிய பேருந்துகள் தாமதம் ஏற்பட்டதால் மக்கள் கோபம் அடைந்து மறியல் செய்தார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் தான். காலையில் இருந்து இரவு வரை எந்த பிரச்சினையும் இன்றி போக்குவரத்து சென்று கொண்டிருந்தது. இன்னொரு புறம் இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் சேவை இருக்கும் என்ற எண்ணத்தில் சிலர் வந்து விடுகிறார்கள்.
எல்லோரும் இல்லை.. 200 - 300 பேர் அந்த நேரத்தில் வந்து கொண்டு பேருந்துகளை கேட்பது என்பது எப்படி சாத்தியம் என்பதை அவர்களே உணர வேண்டும். ஏனென்றால் ஒரு செட்யூல் சர்வீஸ் என்பது இந்தந்த ஊருக்கு இத்தனை மணிக்கு கிளம்பும் என்பது தமிழ்நாடு முழுவதுமே இருக்கும் நடைமுறை. அந்த செட்யூல் படி பேருந்து இயங்குகிறதா என்றால் இயங்குகிறது. அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பயணிகள் உணர வேண்டும்: திருமண நாட்கள் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலாக பயணிகள் வரும் போது ஏற்கனவே திட்டமிடப்படாத கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அப்படி இயக்கும் போது ஒரு அளவிற்கு மேல் திடீரென்று இரவு 12 மணி.. 1 மணிக்கு வந்து நின்று கொண்டு பயணம் செய்ய பஸ்களை ஏற்பாடு செய்து கொடுக்க கோரிக்கை வைக்கிறார்கள். பேருந்துகளை கூட பக்கத்தில் உள்ள டெப்போக்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த நேரத்தில் எங்கிருந்து டிரைவர் கண்டக்டர்கள் வருவார்கள் என்பதை உணர வேண்டும்.
காலம் காலமாக இப்படி தான்: இன்று நேற்று இல்ல.. காலம் காலமாக இரவு 11 மணிக்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் 4 மணிக்கு மேல் போக்குவரத்து இருக்காது. காரணம் அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தானது. விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பது என்பதால் அது தவிர்க்கப்படுகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு இனி பயணிக்க விரும்புபவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications