சென்னை ஹைகோர்ட்டில் அமைதி ஊர்வலம்.. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பதாகைகள்!
சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி ஊர்வலத்தை நடத்தினர்
இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன் கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பேரணியாக புறப்பட்டு குறளகம், எஸ்பிளானேடு நுழைவு வாயில் வழியாக அம்பேத்கர் சிலை வரை சமத்துவம், மதசார்பின்மை, ஜனநாயகம், அரசியலமைப்பு பாதுகாப்பை வலியுறுத்தி இந்த அமைதியான பேரணி நடத்தப்பட்டது
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்
அனைத்து கட்சி வழக்கறிஞரும் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
English summary
Peace procession at the madras high Court premises in honor of Martyrs' Day. retired judges and senior lawyers Participation