களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. உலா வரும் குழந்தை கிருஷ்ணர்கள்! பூஜைக்கு உகந்த நேரம் எது?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருஷ்ணர் சிலைகள், பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. மக்கள் இன்று வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய நாள் கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பக்தர்கள் விரதம் அனுசரித்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

ஆவணி மாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்ந்தது. அஷ்டமியில் எட்டாவது குழந்தையாகப் பகவான் கிருஷ்ணர் அவதாரம் எடுத்ததன் காரணமாக ஆவணி மாதம் அஷ்டமி நாளான இன்று ஜென்மாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணரின் பிறந்தநாளான இன்று, மதுரா பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபட்டு கிருஷ்ணரின் அருளைப் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை குழந்தை இல்லாதவர்கள் அல்லது திட்டமிடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடுவார்கள்.
தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுகின்றனர். மாவிலை தோரணங்களால் வீட்டை அலங்கரிக்கின்றனர். கிருஷ்ணர் சிலை அல்லது படங்களை அலங்கரித்து, அவருக்கு சந்தனம், குங்குமம் பூசி, பட்டு ஆடை அணிவித்து, அவர் கையில் புல்லாங்குழலுடன் காட்சி இருக்கும்படி அழகாக அலங்கரிப்பார்கள். அதன்பிறகு, பால், நெய், வெண்ணெய் மற்றும் பிற பொருட்களை படைப்பார்கள். பூக்கள் தூவி மனதார வணங்குவார்கள். கிருஷ்ணருக்கு அப்பம், முறுக்கு, நாவல் பழம் ஆகியவற்றைப் படைத்து வணங்குகின்றனர்.
கிருஷ்ணரை தங்கள் வீட்டுக் குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்து கிருஷ்ணர் வருகையை கொண்டாடுவது வழக்கம். பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மகிழ்கின்றனர். மேலும், கோவில்களில் உறியடி திருவிழாக்களும் இன்று நடத்தப்படுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை உட்பட பல ஊர்களிலும் கடைகளில் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது. மேலும், பலரும் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வத்துடன் வழிபடுவதற்காக வாங்கிச் சென்றுள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இன்று காலை 9.15 மணி முதல் நாளை காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications