ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது.. போராட்டத்தில் குதித்தது மக்கள் அதிகாரம்!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
சென்னை பாரிமுனையில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் ஸ்டெர்லைட்க்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும், இன்று நடக்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் திசை திருப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என பண்டாரம்பட்டி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் இன்று கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உச்சநீதிமன்றம் சென்றுள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆலையை மீண்டும் திறக்க சாதகமான நிலை உள்ளதாக கூறப்படும் நிலையில், போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தருண் அகர்வாலா குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட்டை மூடியது தவறு என அகர்வாலா குழு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications