பெரியார் சிலையை.. செருப்பால் அடிப்பேன்னு அவர் சொன்னப்பவே.. கடிவாளம் போட்டிருந்தால் தடுத்திருக்கலாம்
தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன
சென்னை: "ராமர் சிலை நிர்வாணமாகக் கொண்டுவரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது" என்று ரஜினிகாந்த் சொல்லும்போதே பெரியார் சிலை விவகாரம் உட்பட அனைத்திற்கும் ஒரு கடிவாளம் போட்டிருக்கலாம்.. இப்போது தமிழகத்தில் கலக்கம் சூழ்ந்தள்ளது... பதற்றமும் பீடித்துள்ளது.. பெரியார் சிலை விவகாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
Recommended Video
பெரியாருக்கு முன்னும் பின்னும் நிறைய தலைவர்கள் பிறந்து இறந்தார்கள்... ஆனால் பாஜக கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் பெரியாரின் சிலைகள்தான்.
இன்னும் இவர்கள் பெரியாரையே கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம், அவரது கருத்தியல் வேர் பிடித்து ஆழமாக நிற்கிறது என்பதுதான். உண்மையில், பெரியார் இல்லையென்றால், அவர் சிலை மீதே காவி சாயம் பூசும் உரிமைகூட பூசியவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பதே உண்மை!
ரஜினிகாந்த் நவம்பருக்குள் கட்சி துவங்குவாராம்... அழகிரி நீக்கமாம்... சொல்கிறார் கராத்தே!
நாத்திகர்கள்
ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளை பற்றியே அதிகம் பேசுவார்கள், சிந்திப்பார்கள் என்று சொல்வார்கள். அது முழுசும் உண்மைதான்.. பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்... இப்படிப்பட்ட செயல்களை அடிக்கடி செய்து, மறந்து போன பெரியாரையும் நம் மக்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கிறார்கள்,
வைகோ கண்டனம்
அன்று பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னவரை தலைமை கண்டித்திருந்தால், இன்று இந்த இந்தகொடுமை தொடர்ந்து நடக்காது.. அதிக அளவு உணர்ச்சி வசப்படும் வைகோ, "பெரியார் சிலை மீது கை வைத்தால், கை, கால்களை வெட்டுவேன்" என்று கொந்தளித்துவிட்டார்.
ரஜினிகாந்த்
துக்ளக் விழாவில், "பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் சிலை நிர்வாணமாகக் கொண்டுவரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதையடுத்து, வன்முறை தமிழகத்தில் வெடித்தது.. காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டை பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியிருந்தனர்..
விஷமிகள்
50 ஆண்டுகளாக இருந்து வரும் சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் துண்டித்து சேதப்படுத்தினர்... விஷமிகளின் இச்செயலைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், இயக்கத்தினர் அங்கு போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டிலும் போராட்டங்கள் நடந்தன.
கரு.பழனியப்பன்
முன்பு ஒருமுறை டைரக்டர் கரு.பழனியப்பன் ஒரு பேட்டியில், "ஈவேராதான் இந்த நாட்டின் கேடுன்னு எச்.ராஜா சொன்னார் இல்லையா? தேர்தல் பிரச்சாரத்தில் அவரை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.. ரெண்டு முகம் இருக்கு... தேர்தலுக்கு முன் ஒரு முகம்... தேர்தலுக்கு பின் ஒரு முகம்... தேர்தலின்போதும் உங்க கருத்தை சொல்லுங்களேன் பார்ப்போம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்துத்துவா
இதுதான் உண்மை... தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை தலைதூக்கினாலும், அதில் இருந்து திசை திருப்ப இந்துத்துவா கையாளும் ஆயுதம்தான் பெரியார் சிலை விவகாரம்... பிரச்சனைகளை களைய முடியாதவர்கள், அதனை பூசி மொழுகி, குறுக்கு வழியில் இதுபோன்ற யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.. இதுதான் உண்மை!!
ஆச்சரியம்
அடிக்கடி பெரியார் சிலைகளை அவமதிப்பது, சிலையை உடைப்பது, காவிச் சாயம் பூசுவது போன்றவை அதைச் செய்வோருக்கும் சரி, அவர்கள் சார்ந்த இயக்கங்களுக்கும் சரி எந்த வகையிலும் பலனைத் தராது என்பதே எதார்த்தம். ஆனால் அதையும் தாண்டி ஏன் இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.