Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியாரின் 145-வது பிறந்த தினம்.. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் உறுதி மொழியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Periyars 145th birthday, Chief Minister MK Stalin, Edappadi palanisamy pay tributes

உறுதிமொழியை முதல்வர் மு.க ஸ்டாலின் வாசித்தார். " யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவனாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

சமுக நீதியை அடித்தளமக கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்" எனக் கூறி முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Periyars 145th birthday, Chief Minister MK Stalin, Edappadi palanisamy pay tributes

முன்னதாக தனது "எக்ஸ்' சமூக வலைத்தள பதிவில், எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு இருந்ததாவது:- சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கார்கே கூறுகையில், " மூட நம்பிக்கை மற்றும் அறியாமை என்னும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி கல்வி எனக்கூறியவர் பெரியார். சமூக நீதி, சமுத்துவத்துக்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+