பெரியாரின் 145-வது பிறந்த தினம்.. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் உறுதி மொழியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியை முதல்வர் மு.க ஸ்டாலின் வாசித்தார். " யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவனாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
சமுக நீதியை அடித்தளமக கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்" எனக் கூறி முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தனது "எக்ஸ்' சமூக வலைத்தள பதிவில், எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு இருந்ததாவது:- சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கார்கே கூறுகையில், " மூட நம்பிக்கை மற்றும் அறியாமை என்னும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி கல்வி எனக்கூறியவர் பெரியார். சமூக நீதி, சமுத்துவத்துக்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications