பெரியாரின் 145-வது பிறந்த தினம்.. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் உறுதி மொழியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியை முதல்வர் மு.க ஸ்டாலின் வாசித்தார். " யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவனாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
சமுக நீதியை அடித்தளமக கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்" எனக் கூறி முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தனது "எக்ஸ்' சமூக வலைத்தள பதிவில், எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு இருந்ததாவது:- சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கார்கே கூறுகையில், " மூட நம்பிக்கை மற்றும் அறியாமை என்னும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி கல்வி எனக்கூறியவர் பெரியார். சமூக நீதி, சமுத்துவத்துக்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்" என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications