8 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.. ஒரே விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல்.. இன்றைய நிலவரம்!
சென்னை: கடந்த 8 நாட்களாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. தினமும் சர்வதேச நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் டீசல் விலையை தீர்மானம் செய்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து பிரென்ட் க்ருட் எண்ணெய் உயர்ந்து வந்தது. பிரென்ட் க்ருட் எண்ணெயின் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. 2.62 டாலர் இது உயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் சரமாரியாக உயர்ந்தது.
ஆனால் கடந்த 8 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் இந்தியாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இத பண்ணுங்க.. பெட்ரோல் விலை கண்டிப்பா குறையும்.. நாங்க கேரண்டி.. இந்தியாவுக்கு சவுதியின் அட்வைஸ்
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை விற்கப்பட்டதிலேயே அதிக விலை ஆகும்.