பெட்ரோல், டீசல் விலை 59 நாட்களுக்குப் பிறகு உயர்வு - சென்னையில் எவ்ளோ தெரியுமா
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 31காசுகள் ஆகவும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 17 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 31 பைசாவாகவும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76 ரூபாய் 17பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84 ரூபாய்14 பைசாவாகவும் டீசல் லிட்டர் 75 ரூபாய் 95 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 31 பைசாவாகவும் டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76 ரூபாய் 17பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் விலை உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் 85 ரூபாயை தொட்டுவிடும் நிலைக்கு வந்த போது நாடு முழுவதும் எதிர்கட்சியினர் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
பீகார் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி இருந்தது. கடந்த 59 நாட்களுக்கும் மேலாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை சிறிய அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications