Phethai Storm: உருவானது பேய்ட்டி புயல்.. சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக வடதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக வடதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கடந்த வாரம் உருவான இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்தது.
இந்த நிலையில் இது புயலாக மாறியுள்ளது.

புயலாக வலுவடைந்தது
கொஞ்சம் கொஞ்சமாக இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது.புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறியுள்ளது. இதற்கு பேய்ட்டி புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பேய்ட்டி புயலுக்கான பெயரை தாய்லாந்து வைத்தது.

தீவிரம் அடையும்
இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். ஆனால் கஜா புயல் அளவிற்கு இந்த புயலால் பாதிப்பு ஏற்படாது. அந்த அளவிற்கும் காற்றும் வீசாது.

எங்கு கடக்கும்
ஆந்திராவில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது. நாளை பிற்பகல் கரையை கடக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மழை
சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் கண்டிப்பாக இன்றும் நாளையும் மழை பெய்யும்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications