மோடி பிரச்சாரத்துக்கு தேர்தல் முடியும் வரை தடை விதிங்க.. இப்படி பேசிருக்காரு.. பாய்ந்து வந்த திமுக!
சென்னை: மக்களவைத் தேர்தல் முடியும் வரை மோடி பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டின் பக்கம் தேசிய தலைவர்களின் பார்வை திரும்பியுள்ளது. பிரதமர் மோடி இந்த ஆண்டில் மட்டும் 7 முறை தமிழகத்திற்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 7 ஆவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். மேலும், வேலூர், மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடியும் வரை மோடி பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது!
குறிப்பாக :
1. 06/04/2024 அன்று, உத்தர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பேசினார்.
2. 08/04/2024 அன்று, பீகாரில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ராமரை இழிவுபடுத்தியதாகக் கூறினார்.
3. 09/04/2024 அன்று, உத்தர பிரதேசத்தில் பேசுகையில், நவராத்திரி முதல் நாளன்று தேவியை வணங்குபவர்கள் காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
4. தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், நல்ல சாதியை சார்ந்த ஒருவர் தங்கள் கட்சி தலைவராக இருப்பதாகக் கூறி, பிற சமூக மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தினார்.
இவை அனைத்தும் வன்மையான கண்டனத்திற்குரிய பேச்சு. இப்பேர்பட்ட ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் என்று சொல்வது இந்தியாவிற்கே தலைகுனிவு. பிரதமர் மோடியின் பேச்சுக்கள் யாவும், இச்சட்டப்பிரிவிற்கு எதிரானது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951
பிரிவு 125: தேர்தல் தொடர்பாக வகுப்பினரிடையே பகைமையை ஊக்குவித்தல்: இந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் தொடர்பாக எந்த ஒரு நபரும் இந்திய குடிமக்களில் மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி, பகை அல்லது வெறுப்பு உணர்வுகளை, பல்வேறு வகுப்பினரிடையே ஊக்குவிக்க அல்லது ஊக்குவிக்க முயற்சி செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கூட்டணி கட்சியாக செயல்படாமல் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், இந்தியாவில் 2024 தேர்தல்கள் முடிவடையும் வரை அவரது பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்." என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications