சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் சென்னையின் ஹீரோ.. மோடி புகழாரம்

டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார்

    சென்னை: 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    வண்ணாரப்பேட்டை டாக்டர் ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஏழை மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் ஜெயச்சந்திரன்.

    5 ரூபாய் கட்டணத்தை தாண்டி இதுவரை யாரிடமும் அவர் பணம் வாங்கியதே இல்லை. இதனால் பொதுமக்களின் நன்மதிப்பை எளிதாக பெற்றதுடன், அதனை கடைசிவரை தக்க வைத்தும் கொண்டார்.

    அஞ்சலி

    அஞ்சலி

    அவரது இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பலர் கதறி அழுதவாறே மாலைகளை வழிநெடுகிலும் போட்டுகொண்டு சென்றனர்.

    டாக்டர் ஹீரோ

    டாக்டர் ஹீரோ

    அவரது மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடியும் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "டாக்டர் ஜெயச்சந்திரன் ஹீரோ என்றும் பிறரின் நலனுக்காக தூய்மையான வாழ்வை அர்ப்பணித்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன்" என்றும் அவர் கூறியுள்ளார்" என்றும் பதிவிட்டுள்ளார்.

    5 மாநில தேர்தல்

    5 மாநில தேர்தல்

    எத்தனையோ பேர் தமிழகத்தில் கொத்து கொத்தாக இறந்து போனாலும் பெரும்பாலும் ரியாக்‌ஷன் காட்டாத பிரதமர் மோடி, 5 ரூபாய் டாக்டர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் இப்படியெல்லாமா ஒருவரை மாற்ற வைக்கும் என்றும் கேள்வி எழுகிறது.

    கண்ணீர் இரங்கல்

    தமிழகத்தில் அவருக்கு எதிர்ப்புகள் இருப்பது என்னவோ உண்மைதான், அதனை உடைத்தெறிவதற்காக அடுத்த மாதம் தமிழகம் வருகை, கண்ணீர் இரங்கல் என மோடியின் நடவடிக்கைகள் வியப்பை தருகிறது. தமிழகத்தில் பாஜக ஓட்டு வாங்க வேண்டும் என்பதையும் தாண்டி, வண்ணாரப்பேட்டையிலும் பாஜக கொடி பறக்க நினைக்கும் பிரதமர் மோடியின் மாற்றத்தை என்னவென்று சொல்வது?

    English summary
    PM Modi pay condolence 5 rupee doctor Jayachandra. He says that Jayachandran is a hero and his was a life purely for the betterment of others
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X