திண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும்... ராமதாஸ் புதிய கோரிக்கை
சென்னை: சேலம் -சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகி அது கிடப்பில் உள்ள நிலையில், திண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸின் கோரிக்கைக்கு ஒரு புறம் வரவேற்பு இருந்தாலும், திண்டிவனம்-திருச்சி இடையே சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்கள் சற்று அதிர்ச்சியோடு தான் இந்த விவகாரத்தை பார்க்கின்றனர்.

அதிவேக சாலை
தமிழகத்தில் சாலைவழி பயண நேரத்தை குறைக்கும் வகையில், முதற்கட்டமாக சேலம் சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது விளைநிலங்கள் வழியே அமைக்கப்பட இருந்ததால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திட்டம் இப்போது தொங்கலில் உள்ளது.

திருச்சி-திண்டிவனம்
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், திருச்சி-திண்டிவனம் இடைடே 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திண்டிவனம்- திருச்சி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இணைப்பு பாதை
சென்னை -திருச்சி சாலை என்பது வடமாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதை என தெரிவித்துள்ளார் ராமதாஸ். எனவே, திண்டிவனம் திருச்சி சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது என்றாலும் கூட, திண்டிவனம் -திருச்சி இடையே சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை திருச்சி வரை 8 வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டால் தங்கள் நிலம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் இப்போதே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
-
தேர்தலில் தனித்துப் போட்டியா?.. கூட்டணியா?.. தைலாபுரத்தில் ராமதாஸ் முக்கிய ஆலோசனை -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications