அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்?
சென்னை: அதிமுக மற்றும் பாமக கூட்டணி நாளை உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக நாளை பொதுவான ஒரு இடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் அதிமுக தலைவர்களும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

ஆலோசனை
அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தேர்தல் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பியூஷ் கோயல்
அதே போல் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வீட்டிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னைக்கு அமித்ஷாவும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலும் வருகின்றனர்.

தொகுதி பங்கீடு
அப்போது அதிமுக- பாஜக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதுபோல் நாளை அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகிறது உள்ளிட்டவை குறித்து அமித்ஷா வெளியிடுவார் என்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

பாமக நிறுவனரும் சந்திப்பு
அதற்கு முன்னதாக சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அதிமுக தலைவர்களும் பியூஷ் கோயலும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது போல் நாளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுவான இடத்தில் சந்தித்து பேசுவார் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications