தேர்தல் வந்தா திராவிட மாடல் தெரியாதா? ஆரத்திக்கு கும்பிடு போடுறீங்களே? - எம்.பிக்கு அன்புமணி கேள்வி!
சென்னை : தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கும்போது மட்டும் முட்டிக்கொண்டு போய் கும்பிடு போடுகிறீர்களே.. அப்போது திராவிட மாடல் இல்லையா? என திமுக எம்.பிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில், இந்து மதம் சார்ந்த பூஜை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திராவிட மாடலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என திமுக எம்.பி செந்தில் குமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

திமுக எம்.பி செந்தில்குமார்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து இந்து மதம் சார்ந்த பூஜை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் செந்தில் குமார் எம்.பி. அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் இருக்கிறது என கோபமாகப் பேசினார்.

கருத்தால் சர்ச்சை
இந்து மதம் சார்ந்த பூஜை மட்டும் நடத்துகிறீர்கள்.. சர்ச் ஃபாதரையும் கூப்பிடுங்கள், மசூதி இமாமை கூப்பிடுங்கள் என திமுக எம்.பி செந்தில் குமார் பேசினார். இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது. தருமபுரி எம்.பி செந்தில்குமாரின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பும், சிலர் வரவேற்பும் தெரிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் திமுக எம்.பி செந்தில்குமாரின் செயலை விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். தருமபுரி எம்.பி வீடியோ வந்திருக்கிறது, ஏதோ ஒரு அரசு நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பூஜை நிகழ்ச்சி செய்கிறார்கள். அது மிகவும் சாதாரணமானதுதான். எல்லோரும் செய்வதுதான்.

அவரவர் நம்பிக்கை
இந்த பூஜைகள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அங்கு வந்த எம்.பி, இது திராவிட மாடல் ஆட்சி இதுபோன்ற பூஜைகள் செய்யக்கூடாது எனக் கூறுகிறார். திராவிட மாடலுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கிறது? அங்கு இருப்பவர்கள் நம்பிக்கை இருக்கிறது, அதனால் அவர்கள் செய்கிறார்கள். இது காலம் காலமாக நடப்பது தான்.

ஆரத்தி எடுக்கும்போது
தேர்தல் நேரத்தில் மட்டும் ஆரத்தி எடுக்கும்போது முட்டிக்கொண்டு போய் கும்பிடு போடுகிறீர்களே.. அப்போது திராவிட மாடல் இல்லையா? இதில் என்ன இருக்கிறது? இது அவரவர் நம்பிக்கை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும். வீணாக எல்லா விவகாரங்களிலும் தலையிடக்கூடாது" எனப் பேசியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications