தேர்தல் வந்தா திராவிட மாடல் தெரியாதா? ஆரத்திக்கு கும்பிடு போடுறீங்களே? - எம்.பிக்கு அன்புமணி கேள்வி!
சென்னை : தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கும்போது மட்டும் முட்டிக்கொண்டு போய் கும்பிடு போடுகிறீர்களே.. அப்போது திராவிட மாடல் இல்லையா? என திமுக எம்.பிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில், இந்து மதம் சார்ந்த பூஜை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திராவிட மாடலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என திமுக எம்.பி செந்தில் குமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

திமுக எம்.பி செந்தில்குமார்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து இந்து மதம் சார்ந்த பூஜை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் செந்தில் குமார் எம்.பி. அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் இருக்கிறது என கோபமாகப் பேசினார்.

கருத்தால் சர்ச்சை
இந்து மதம் சார்ந்த பூஜை மட்டும் நடத்துகிறீர்கள்.. சர்ச் ஃபாதரையும் கூப்பிடுங்கள், மசூதி இமாமை கூப்பிடுங்கள் என திமுக எம்.பி செந்தில் குமார் பேசினார். இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது. தருமபுரி எம்.பி செந்தில்குமாரின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பும், சிலர் வரவேற்பும் தெரிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் திமுக எம்.பி செந்தில்குமாரின் செயலை விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். தருமபுரி எம்.பி வீடியோ வந்திருக்கிறது, ஏதோ ஒரு அரசு நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பூஜை நிகழ்ச்சி செய்கிறார்கள். அது மிகவும் சாதாரணமானதுதான். எல்லோரும் செய்வதுதான்.

அவரவர் நம்பிக்கை
இந்த பூஜைகள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அங்கு வந்த எம்.பி, இது திராவிட மாடல் ஆட்சி இதுபோன்ற பூஜைகள் செய்யக்கூடாது எனக் கூறுகிறார். திராவிட மாடலுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கிறது? அங்கு இருப்பவர்கள் நம்பிக்கை இருக்கிறது, அதனால் அவர்கள் செய்கிறார்கள். இது காலம் காலமாக நடப்பது தான்.

ஆரத்தி எடுக்கும்போது
தேர்தல் நேரத்தில் மட்டும் ஆரத்தி எடுக்கும்போது முட்டிக்கொண்டு போய் கும்பிடு போடுகிறீர்களே.. அப்போது திராவிட மாடல் இல்லையா? இதில் என்ன இருக்கிறது? இது அவரவர் நம்பிக்கை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும். வீணாக எல்லா விவகாரங்களிலும் தலையிடக்கூடாது" எனப் பேசியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications