யு டர்ன்? நாடாளுமன்றத்தில் சிஏஏவை ஆதரித்துவிட்டு சட்டசபையில் எதிர்த்த பாமக.. ஜிகே மணி பேசியது என்ன?
சென்னை: சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை இன்று சட்டசபையில் ஆதரித்து பாமக பேசியது. முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்து பாமக தலைவர் ஜி.கே மணி இன்று அவையில் பேசியது.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்ட திருத்தத்தை எதிர்ப்போம். இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதிமுக தீர்மானம் தாக்கல் செய்யப்படும் முன்பே வெளிநடப்பு செய்தது. பாஜக கட்சி இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. இந்த தீர்மானம் திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

பாமக
ஆச்சர்யமாக சிஏஏவிற்கு எதிரான தீர்மானத்தை பாமக சட்டசபையில் ஆதரித்து பேசியது. பாமக தலைவர் ஜி.கே மணி இன்று சட்டசபையில் பேசுகையில், முதல்வர் அவர்கள் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிராக அரசின் தனி தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பது என்னவென்றால், உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு ஆபத்து என்றால் உடனே எதிர்பார்ப்பது தாய் தமிழ்நாட்டை. தமிழ்நாடு தங்களை காக்கும் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.

இலங்கை தமிழர்
இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது அவர்கள் தமிழ்நாட்டிற்குதான் வந்தார்கள். தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிற்குத்தான் அவர்கள் ஓடி வந்தனர். தமிழ்நாடு அரசு இவர்களுக்கு சிறந்த உதவிகளை செய்து வருகிறது. பல உதவிகளை தமிழ்நாடு அரசு அவர்களுக்கு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் இதுவரை இல்லாத அளவிற்கு 317 கோடி ரூபாய் நிதியை இலங்கை தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்து, இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி இருக்கிறார்.

அநீதி இழைக்கப்படுகிறது
அப்படிப்பட்ட இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ முடியாத நிலை உள்ளது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் அவர்கள் குடியுரிமை பெற்று வாழ முடியாத நிலை உள்ளது. சிஏஏ சட்ட திருத்தம் இந்த உரிமையை இலங்கை தமிழர்களுக்கு மறுக்கிறது. இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், என்று பாமக தலைவர் ஜி.கே.மணி இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார். பாமக நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது.

பாமக
ராஜ்ய சபாவில் பாமக எம்பி அன்புமணி இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தார். இதன் மூலமே பாஜக அப்போது ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாமலே அதிமுக, பாமக போன்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த நிலையில் தற்போது இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை பாமக சட்டசபையில் ஆதரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க!











Click it and Unblock the Notifications