என்டிஏ கூட்ட மேடையில் மாம்பழ சின்னம்.. அரசியல் அறமற்ற செயல் இது.. கொதிக்கும் ராமதாஸ்!
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் அனுமதி பெறாமல் மாம்பழ சின்னத்தை பயன்படுத்துவதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தச் செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ், இப்படியான அரசியல் அறமற்ற செயலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியின் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் அத்தனை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜிகே வாசன், டிடிவி தினகரன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட அத்தனை கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டம் மேடையின் பின்னணியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாமகவின் சின்னமான மாம்பழமும் இடம்பெற்றுள்ளது. இது ராமதாஸ் தரப்பை கொந்தளிக்க செய்திருக்கிறது.
ஏனென்றால் மாம்பழ சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தின் மேடையில் பயன்படுத்துவது சட்டவிரோதம் மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்தச் செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மாம்பழம் சின்னம் பாமக தொண்டர்களின் அடையாளம்.
அது யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் செயலாலும். பிரதமர் நிகழ்ச்சியில் இத்தகைய சட்டவிரோத செயல் பிரதமர் பதவிக்கு இழைக்கப்படும் அவமரியாதை. தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கண்டித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications