கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்... வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது
திருப்பத்தூர் : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறப்பட்ட நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டதில் மாணவர் அமைப்பினர் இணைந்தனர். அந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

கலவரத்தின்போது சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் சென்ற ஒரு கும்பல், பள்ளி வாகனங்களையும், சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தியது. வேறு சில கும்பல், இந்த சூழலை தங்களுக்கு சாதகமகப் பயன்படுத்திக்கொண்டு, பள்ளியில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், குளிர்சாத பெட்டி உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.
இதற்கிடையே நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். பின்னர் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவம், தமிழகம் முழுக்க காட்டுத்தீயாக பரவி, தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி, வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கோகுல் என்ற இளைஞர், வாட்ஸ்அப் குழு அமைத்து, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோகுலை கைது செய்து, கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர், உயிரிழ்ந்த பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கடந்த 17-ந் தேதி, எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் என்பவர், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Recommended Video
இந்தப் புகாரின் பேரில், கிராமிய காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். அவர்மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வீண் வதந்தியை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications