மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன் தீ வைத்த இளைஞர்.. தட்டி தூக்கிய சென்னை போலீஸ்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு தீ வைத்து எரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவில் முன்பு தீ வைத்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதியில் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக கோயிலின் கதவு சேதம் அடையவில்லை. கோயிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.

இதையடுத்து அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையில் போலீஸார் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது கோயில் பாதுகாவலர்கள் யாரும் அங்கு இல்லை என்றும், கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
மது போதையில் மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தீ வைத்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோயில் வாசலில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்ற மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
இந்த நிலையில் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்ததாக அனகாபுத்தூரை சேர்ந்த தீனதயாளன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications