அதிமுக போராட்டம் எதிரொலி.. சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராடி வரும் நிலையில், சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராடி வரும் நிலையில், சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.
இந்த நிலையில் சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
[சென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்.. போலீஸ் நடவடிக்கை.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி ]
மதுரையில் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகள், கோவையில் சாந்தி தியேட்டர், திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகள் பல என பல இடங்களில் போராட்டம் நடக்கிறது. சென்னையில் தியேட்டர்கள் முன்னில் போராட்டம் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுக்க சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராடும் நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல தியேட்டர்களுக்கு வெளியே பதட்டமான சூழ்நிலையில் நிலவி வருகிறது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து தியேட்டர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில தியேட்டர்களில் சர்கார் காட்சிகள் ரத்து செய்யப்படுவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.