கலங்கடிக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம்.. கொதிக்கும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் நேஷனல் மீடியா!
பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய ஊடகங்கள் எந்த விதமான செய்திகளும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
Recommended Video

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய ஊடகங்கள் எந்த விதமான செய்திகளும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. இந்த சம்பவத்தை தேசிய மீடியாக்கள் ஒரு சிறிய செய்தியாக கூட வெளியிடவில்லை.
பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. அந்த கும்பல் பெண்களை ஏமாற்றி பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
இந்த பாலியல் வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

வெளியிடவில்லை
பொள்ளாச்சி விவகாரம் பெரிதாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுகுறித்து தேசிய மீடியாக்கள் இதுவரை எந்த செய்தியும் வெளியிடவில்லை. தமிழகமே இங்கு கொதித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தேசிய ஊடகங்கள் இதுகுறித்து தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.

என்ன முக்கியம்
தற்போது தேர்தல் நேரம் என்பதால் அதை குறித்த செய்திகளே தேசிய ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்து இருக்கிறது. வடஇந்திய மக்கள் தேர்தல் குறித்து நிறைய செய்திகளை படிக்கிறார்கள். அதனால் தேசிய ஊடகங்கள், தேர்தல் செய்திகளில்தான் அதிக அளவில் கவனம் செலுத்துகிறது.

தெரியவில்லை
இதனால் தற்போது இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்த எந்த விவரமும் வடஇந்தியர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. என்ன நடந்தது, தமிழகத்தில் ஏன் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறித்து வடஇந்தியர்களுக்கு எந்த விஷயமும் தெரியாது.

நிறைய பேர் இருக்கிறார்கள்
பொதுவாக தேசிய மீடியாக்களில் தமிழர்கள் நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த செய்தியாளர்கள்தான் ஊடக துறையில் முக்கிய இடங்களில் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் இந்த பொள்ளாச்சி பிரச்சனையை தேசிய அளவில் கொண்டு சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications