Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் வந்தாலும் கூட.. சென்னையில் குறையாத போக்குவரத்து நெரிசல்.. அணிவகுத்து நின்ற வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் இன்று முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நிலையில் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்திருந்தாலும் கூட பல இடங்களில் வாகன நெரிசல் என்பது அதிகரித்து காணப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17 ம் தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பல ஐடி நிறுவனங்களுக்கு நாளைய தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும்.

Pongal 2024: Even if the Kilambakkam Terminal comes to function no reduction in traffic jam in Chennai

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பொதுமக்கள் சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். மக்கள் சிரமமின்றி சென்று வர வசதியாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வழக்கமாக 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 பேருந்துகள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம், சென்னை கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, குரும்குளம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஏராளமான மக்கள் கார்களில் புறப்பட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தான் சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக இருந்தது. ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன. விழுப்புரம், திருச்சி உள்பட தென்மாவட்டங்களுக்கு இந்த சாலை வழியாக ஏராளமானவர்கள் சென்றதால் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

மேலும் எப்போதும் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பெருங்குளத்தூரிலும் இன்று வாகனங்கள் ஊர்ந்து தான் சென்றன. பஸ்களை விட கார்களின் எண்ணிக்கை என்பது அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது இன்றும் அங்கு ஏற்பட்டது. சிங்கபெருமாள் கோவில் சாலையிலும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மெதுவாக சென்றன. மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இருப்பினும் கூட சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் என்பது வழக்கத்தை விட குறைந்து இருந்தது. பொதுவாக பண்டிகை சமயங்களில் கோயம்பேட்டில் இருந்து அனைத்து பஸ்களும் இயங்குவதால் அங்கு கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். கடும் இட நெருக்கடி ஏற்படும். ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் இன்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் என்பது வழக்கத்தை விட குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+