2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பெரியகருப்பன் அப்டேட்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுவரை 97% குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்று பயன் அடைந்துள்ளனர் என கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை சீராக நடத்துவதற்காக ரேஷன் கடைகளில் டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி அவர்கள் தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்கப் பணத்தை பெற்றுக்கொண்டனர். இதனால் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏழை எளிய மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில் தற்போது வரை 97% சதவீத ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத்தை பெற்று முடித்து விட்டனர். மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் பெறாத நிலையில், அவர்களுக்காக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனை எடுத்துச் சென்று தங்கள் ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதல்வர் அவர்களின் சீர்மிகு திட்டங்கள் மக்களை சென்றடையவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், பேணிக் காத்திடவும், அயராது சிந்தித்தும் செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்தும், உணர்ந்தும் துறைகள் தோறும் பல திட்டங்கள் அளித்து, அதில் சாதனைகளையும் புரிந்து வருகிறார்.
மக்களுக்கான வாழ்வாதாரத்தை சேவைகளையும், வாழ்வின் பொருளாதாரத்தையும், தன்னம்பிக்கையும் மேம்படுத்திடவும், கூட்டுறவுத்துறை ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. வளர்த்திடவும், கூட்டுறவுத்துறையின் பல முத்தான திட்டங்கள் புதியதாக துவக்கியும், ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்தியும், சிறப்பாகவும் செம்மையாகயும் செயல்படுத்தி வருவதை, கூட்டுறவுத்துறையின் அலுவலர்களும், பணியாளர்களும் சிறப்பாக கவனமுடன் தொய்வின்றி திறம்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும்" எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுவரை 97% குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்று பயன் அடைந்துள்ளனர் என கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications