சென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று இரவு தொடங்கி வரும் திங்கள்கிழமை வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

சொந்த ஊர்
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சுமார் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

திங்கள் வரை
பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு நாளை வேலை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இன்று வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவர். அதேசமயம் கடைகளில், உணவகங்களில், பணிபுரிவோர் கூடுதலாக இரண்டு நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகள் முகாம்
திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, என பல முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் இன்றிரவு தொடங்குகிறது. ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்
வரும் நான்கு நாட்களுக்கும் சென்னையின் எல்லையான பெருங்களத்தூர் தொடங்கி தாம்பரம் வரை காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அதனை சமாளிக்க கூடுதல் எண்ணிக்கையில் போக்குவரத்து போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications