மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.. அஞ்சல் துறை போட்ட அதிரடி கட்டுப்பாடுகள்.. என்னென்ன தெரியுமா?
சென்னை: அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலிருந்து (SCSS) உங்களது முதலீட்டை முன்கூட்டியே எடுப்பதற்கு (Premature Withdrawal) அரசாங்கம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர் ராஜேஷ் வெளியிட்ட பதிவினை பாருங்கள்.
பொருளாதார நிபுணர் ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ""நவம்பர் 7, 2023 அன்று வெளியிடப்பட்ட அஞ்சல் துறை அறிவிப்பின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலிருந்து (SCSS) உங்களது முதலீட்டை முன்கூட்டியே எடுப்பதற்கு (Premature Withdrawal) அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரங்கள் கீழே:

உங்களது முதலீட்டை ஒரு வருடத்திற்கு முன்னமே எடுக்க விரும்பினால், பெனால்டி தொகையாக, உங்களது முதலீட்டில் 1% வசூலிக்கப்படும். அதாவது, நீங்கள் ₹1,00,000 முதலீடு செய்து, ஒரு வருடம் முடியும் முன்னமே உங்களது முதலீட்டை Premature Withdrawal செய்ய விரும்பினால், அதற்கு கட்டணமாக ₹1,000 பிடித்துக்கொண்டு, உங்களுக்கு ₹99,000 திரும்ப வழங்கப்படும்.
ஒன்று/இரண்டு/மூன்று வருடங்களுக்கான வைப்புதொகையை, டெபாசிட் செய்த தேதியிலிருந்து ஆறு மாதம் முடிந்த பிறகு மற்றும் ஒரு வருட முடிவிற்குள் நீங்கள் premature withdrawal செய்தால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, நார்மல் போஸ்டர் ஆபிஸ் சேவிங் அக்கவுண்ட் வட்டியாக மாற்றப்படும்.

ஒன்று/இரண்டு/மூன்று வருடங்களுக்கான வைப்புதொகையை, டெபாசிட் செய்த தேதியிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னர் நீங்கள் premature withdrawal செய்தால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, முதலீட்டு வட்டியிலிருந்து 2% கழித்துக்கொள்ளப்பட்டு, எவ்வளவு மாதங்கள் முதலீடு செய்தீர்களோ, அந்த மாதங்களுக்கு மட்டும் வட்டி கணக்கிட்டு உங்களுக்கு தரப்படும்.
ஐந்து வருட முதலீட்டுகளில், நீங்கள் நான்கு வருடம் முடிந்த பின்னர் premature withdrawal செய்தால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, நார்மல் போஸ்டர் ஆபிஸ் சேவிங் அக்கவுண்ட் Account வட்டியாக மாற்றப்படும். எந்தவொரு முதலீட்டையும், ஆறு மாதம் முடியும் முன்னர் உங்களால் premature withdrawal செய்ய முடியாது." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications