என்ட் கார்டு இல்லாத வடகிழக்கு பருவமழை.. மாச கடைசில மீண்டும் தொடங்கி பிப். வரை நீளும் மழை.. வெதர்மேன்
சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த பருவமழையில் இரு புயல்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று நிவர் புயல், இன்னொரு புயலாக மாறி கரையை கடப்பதற்குள் வலுவிழந்தது புரேவி.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த பருவமழையில் இரு புயல்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று நிவர் புயல், இன்னொரு புயலாக மாறி கரையை கடப்பதற்குள் வலுவிழந்த புரேவி.
இதில் நிவர் நல்ல மழையை கொடுத்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. புரேவி புயலும் தமிழகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியான மழையை கொடுத்தது என்றே கூறலாம்.

14 மணி நேரம்
கடந்த 5 ஆம் தேதி சென்னையில் இரவு முதல் விடாமல் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. புயல் உருவாகினாலோ காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தாலோ எப்படி பெய்யுமோ அப்படியிருந்தது இந்த மழை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடையும் என சொல்லப்பட்டது.

ட்விட்டர் பக்கம்
ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் பிப்ரவரி மாதம் வரை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் North East Monsoon Never Ending Monsoon ஆக மாறிவிட்டது. அதாவது வடகிழக்கு பருவமழை முடிவே இல்லாமல் இருக்கிறது.

வறண்ட காற்று
பொதுவாக குளிர் காலத்தில் மழை பெய்யாது. ஆனால் தற்போது குளிர் காலத்தில் மழையும் பெய்கிறது. இதனால் தமிழகத்திற்கு இந்த முறை குளிர் காலம் இல்லாமலேயே போய்விட்டது. ஜனவரி 17-ஆம் தேதிக்கு பிறகு வறண்ட காற்றால் மழைப் பொழிவு நின்றுவிடும்.

டெல்டா மாவட்டம்
ஆனால் மீண்டும் ஜனவரி மாத கடைசியில் தொடங்கும். இது பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மாதம் நாம் பார்ப்பது எல்லாம் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மி.மீ. வரை கடலூரில் மழை பெய்துள்ளது. அது போல் டெல்டா மாவட்டங்களிலும் 100 முதல் 200 மி.மீ. வரை பெய்துள்ளது.

கருணை காட்டாத மழை
இத்தனைக்கும் புயல் சின்னம் ஏதும் உருவாகாமலேயே அதிகமான மழை பெய்துள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கருணையே இல்லாமல் மழை பெய்துவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications