மறைந்த க அன்பழகனின் உடலுக்கு திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அஞ்சலி
சென்னை: மறைந்த பேராசிரியர் க அன்பழகனின் உடலுக்கு திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
வயது முதிர்வு காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார் பேராசிரியர் க அன்பழகன். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, ஆ ராசா, டிகேஎஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு ஸ்டாலின் மகள் செந்தாமரையும், மருமகன் சபரீசனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அது போல் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications