சீமான் விவகாரம்.. கோரிக்கை நிறைவேறியிருக்கே.. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரஷாந்த் கிஷோர்
வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்விட் பதிவிட்டுள்ளார்.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு போலியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
தமிழகத்தில் வேலை செய்து வரும் பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது.

வன்முறை தூண்டப்படுகிறது
பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழுவும் தமிழகம் விரைந்தது. தமிழக அரசு உடனடியாக வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று விளக்கம் அளித்தது. இதனிடையே, பீகார் மநிலத்தை சேர்ந்தவரும் பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், தனது ட்விட் பதிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். 'தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது" என்று குற்றம் சாட்டிய பிரசந்த் கிஷோர் இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும், "போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டுவர்களை விடக்கூடாது. ஏன், சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என்று நேரடியாக சீமானை பார்த்து கை காட்டியிருந்தார்.

சீமான் மீது புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தின் போது, சீமான் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பேசிய வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்து ஆய்வு செய்து பார்த்தனர். அதில், கடந்த மாதம் 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தெரியவந்தது.

பிரசாந்த் கிஷோர் வரவேற்பு
இதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்கில் இந்த 3 பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதை வரவேற்றுள்ள பிரஷாந்த் கிஷோர், இது தொடர்பான செய்தியை தனது ட்விட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரசாந்த் கிஷோர், விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

பாதுகாப்புடன் உள்ளனர்
தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரவிய உடனேயே தமிழக அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புபவர்கள் தேச துரோகிகள் என்று விமர்சித்து இருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்த பீகார் அரசுக் குழுவும் "தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்" என்று கூறியது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications