மழைக்காலம் வரப் போகுது! வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தீவிரம்! சிவ்தாஸ் மீனா நடத்திய ஆய்வு!
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த 15 நாட்களுக்குள் நடைபெற்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய உண்மை நிலை குறித்து ஒரு பிரத்யேக குழு மூலம் தகவல் பெற்று ஆய்வு செய்யப்பட்டது.

நடப்பாண்டு பருவமழைக்கு முன்னரே பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
பணிகள் நடைபெறும் பொழுது பல்வேறு துறைகளால், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருத்திற்கொண்டு Barricading அமைத்து அதன் மீது பச்சை துணி கொண்டு மூடி பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, அனைத்து சேவைத்துறையினர் ஆகிய மின்சார வாரியம், இரயில்வே, மெட்ரோ இரயில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதார அமைப்பு துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications