கொரோனா நோய் தடுப்பு பணிகள்... ஆளுநர்களுடன் ஜனாதிபதி இன்று ஆலோசனை
சென்னை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் இருந்தவாறு காணொலி மூலம் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி குடியரசுத் தலைவர் ஆளுநர்களிடம் கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய் பாதிப்பு பற்றியும் அவர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நோயிலிருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. நோய் தொற்றுடைய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர்களுடன் பிரதமர் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தியது போல் இன்று ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு ஒழிக்க செஞ்சிலுவை சங்கத்தின் பங்களிப்புகள், மத்திய அரசின் நடவடிக்கைகள், தனியார் நிறுவனங்கள் தரும் ஒத்துழைப்புகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி இதேபோல் அனைத்து மாநில ஆளுநர்களுடன் கொரோனா நோய் தடுப்பு பற்றி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று நடைபெறுவது இரண்டாவது ஆலோசனைக் கூட்டமாகும்.
கொரோனா நோய் தொற்று வீரியமாகி வருவதால் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் மீண்டும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications