மகாகவி பாரதி பெயரில்.. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு
சென்னை: மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளப் பாரதியாரின் பெயரில் இருக்கை உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு தமிழ் தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக மகாகவி பாரதியாரின் பெயரில் இருக்கை ஒன்று ஏற்படுத்தும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் இனி வட இந்தியாவிலும் தமிழ் தொடர்பான ஆய்வுகளை நடத்த முடியும்.
முன்னதாக மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இந்த ஆண்டு முதல் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை , காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications