தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்... பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
சென்னை: இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று சித்திரை 1ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்.
புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நவராத்திரி தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி அதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும், யுகாதி, குடி பத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் ஆகியவற்றைக் கொண்டாடும் பல மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications