கொரோனா சிகிச்சைக்கான ஜிஎஸ்டி குறைப்பு போதுமானதல்ல.. மத்திய அரசிடம் மீண்டும் மல்லுக்கட்டிய பிடிஆர்!
சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல என 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடந்த 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் முதல்முறையாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் முன்வைத்த கேள்விகள் பாஜக அரசுக்கு ஆட்டம் கொடுத்தது. இதில் இரு விஷயங்களை பிடிஆர் முன் வைத்தார். அதாவது மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. மத்திய நிதியமைச்சர் உள்பட ஒவ்வொரு அமைச்சர்களும் மாநிலத்தின் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான்.

நன்கொடையாளர்
எனவே ஒன்றிய அரசு ஒரு போதும் நன்கொடையாளராக செயல்பட முடியாது என்றார். அது போல் மற்றொரு விஷயம், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஆழமாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இப்போது இல்லாவிட்டால் எப்போது? ம்மால் இயலாவிட்டால் வேறு யாரால் இயலும் என கேள்வி எழுப்பி அனைவரையும் வெலவெலக்க வைத்தார்.

தமிழக மக்கள்
இந்த நிலையில் 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முகத்தில் அடித்தாற்போல் பேசி தமிழக மக்களின் அப்லாஸை அள்ளியுள்ளார்.

நிதியமைச்சர்
அவர் பேசியது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க, 7 மாநில உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஏற்புடையதாக இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர்
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது பூஜ்ய விகிதம் அல்லது பூஜ்யம் புள்ளி ஒன்று சதவிகிதம் வரி தான் விதிக்க வேண்டும் என கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தியதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள்
மேலும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய விகித வரி நிர்ணயிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications