அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திடீரென சூழ்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள்.. சென்னையில் பரபரப்பு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்டு பொதுமக்கள், அடிப்படை வசதிகள் கோரி போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை ராயபுரம் மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராட்டம் நடத்தினர்.
சென்னை மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அமைச்சர் உதயநிதி மரியாதை
இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன், ஆகியோரின் நினைவிடத்திற்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியாகச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில்
சென்னை ராயபுரம் மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன், ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதைத்தொடர்ந்து அருகே உள்ள மற்றொரு மொழிப்போர் தியாகியான டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெண்கள் முற்றுகை
மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூலக்கொத்தளம் இடுகாட்டுக்கு பின்புறத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டனர்.

பரபரப்பு
தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்துதரவில்லை என்றும் கழிப்பிடம், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தரவும் வலியுறுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலினை நெருங்காமல் தடுத்து நிறுத்தி, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு










Click it and Unblock the Notifications