அந்த வார்த்தை.. இது "திராவிடத்தின் குற்றப்பத்திரிகை".. ஏ.கே.ராஜன் அறிக்கைக்கு கிருஷ்ணசாமி விமர்சனம்
ஏகே ராஜன் அறிக்கைக்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: திராவிட சித்தாந்த ஆட்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் கல்வியில் எந்த அளவிற்கு தேசிய நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.. ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய/பாரத/மத்திய அரசாங்கம் என்று ஒரு இடத்தில் கூட வராமல் நமது தேசத்தை மிகப்பெரிய அளவிற்கு இருட்டடிப்பு செய்திருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஏ.கே ராஜன் குழு அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கையை வெளியிட்டது.. அதில், நீட் தேர்வை ரத்த செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
அதாவது, நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அறிக்கை
இந்த அறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. மநீம தலைவர் கமல் சொல்லும்போது, "நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு என்பதை உரக்க சொல்கிறது நீதிபதி ராஜன் அக்குழுவின் அறிக்கை.. உண்மையை வெளிக்கெணர்ந்து சட்ட போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏகே ராஜன் குழுவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பாதிப்புகள்
அதேபோல புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, "நீட் பாதிப்புகள் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்கை, திராவிடத்தின் குற்றப்பத்திரிக்கை" என்று விமர்சித்துள்ளார்.. இது தொடர்பான அறிக்கையில், அவர் சொல்லி உள்ளதாவது:

புனைக்கதைகள்
"எத்தனை கமிட்டி போட்டு ஆராய்ந்தாலும், எவ்வளவு பொய்யுரைகளையும், புனைக்கதைகளையும் பரப்பினாலும் உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியாது என்பதற்கு ஏ.கே.ராஜன் கமிட்டியின் 165 பக்க அறிக்கையே சான்று... இது அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையைப் போல் இல்லை... ஒரு அரசியல் கட்சியின் சார்பாக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையாகவே உள்ளது... நீட் தேர்வுக்கு எதிராக, திராவிட அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு கொண்ட கமிட்டி உறுப்பினர்களை உள்ளடக்கிய அக்குழுவிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

நீட் தேர்வு
எனினும் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு அரசியல் கூட்டணி 'நீட்' தேர்வால் 'சமூக நீதி'க்கு பங்கம் வந்துவிட்டது என கடந்த ஐந்து வருடங்களாக பரப்புரை செய்து வந்தார்களே, உண்மையிலேயே அது போன்று எதாவது ஒரு பாதிப்பை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறதா? அதற்கான தரவுகளை இவர்கள் சமர்ப்பித்து இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காகவே அறிக்கையின் 165 பக்கங்களையும் துருவித் துருவி படித்துப் பார்த்தேன். ஆனால், இவர்கள் புரட்டி வந்த 'சமூக நீதி'க்கு எவ்வித பங்கமும் வந்ததற்கான ஆதாரம் எதுவும் அறிக்கையில் இல்லை.

திராவிட சித்தாந்தம்
எனவே இப்பொழுது அவர்கள் 'கிராமப்புற' மற்றும் 'தமிழ் பாடத்திட்டம்' என்ற வேறு வேறு போர்வைக்குள் நுழைகிறார்கள். NCERT என்ற தேசிய கல்வித் திட்டம் மற்றும் மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையிலும் நடைபெறும் நீட் தேர்வில் தமிழ் மொழி வழிக் கல்வி மாணவர்களால் பெரிய அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை' என்று இக்கமிட்டியில் ஒத்துக் கொண்டிருப்பது அவர்கள் தங்களின் திராவிட சித்தாந்த தோல்விக்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதைப் போல் உள்ளது.

மாணவர்கள்
திராவிட சித்தாந்த ஆட்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் கல்வியில் எந்த அளவிற்கு தேசிய நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.. மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று சொல்லக்கூடிய வட மாநிலங்களில் கூட இந்த அளவிற்கு நீட்டுக்கு எதிராகக் கூக்குரல் கிடையாது.

அடையாளம்
ஆனால் பட்டவர்த்தனமாக எந்த தமிழ் மொழியைக் கூறி கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்களோ அந்த தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட சமுதாயத்திற்கு நல்ல கல்வியைக் கூட கொடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல். இதிலிருந்தே திராவிடத்தால் தமிழர்கள் எந்த அளவிற்கு தங்களுடைய அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள்; அவர்களுடைய தரம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

தேசியம்
ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய/பாரத/மத்திய அரசாங்கம் என்று ஒரு இடத்தில் கூட வராமல் நமது தேசத்தை மிகப்பெரிய அளவிற்கு இருட்டடிப்பு செய்திருக்கிறது.. மே 7-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட 'Dravidian Stock' முழக்கம் வலுவாகி, அது 'ஒன்றியமாக' வளர்ந்து, நீட் தேர்வையே 'தேசியம் திராவிடம்' அல்லது 'Central vs State' என்ற அரசியல் மேடையாக்கி மெல்ல மெல்ல இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டாடிக் கொண்டு போக வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கனவின் ஒரு பகுதியாகவே ராஜன் கமிட்டி அறிக்கையைப் பார்க்க முடிகிறது" என்று கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications