கொரோனா வைரஸை தடுக்க இதுதான் ஒரே வழி.. பேரிடர் நிர்வாக துறை ஆணையர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸை தடுக்க தனிமைப்படுத்தி கொள்வதே ஒரே வழி என தமிழக பேரிடர் நிர்வாக துறை ஆணையர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க வழிதெரியாமல் உலகமே விழி பிதுங்கி வருகின்றன. இதற்கான தடுப்பு மருந்துகள் என்று ஒவ்வொரு நாடுகளும் ஒரு சில மருந்துகளை பயன்படுத்துகின்றன. அதை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. இதுவரையில் கொரோனாவை இந்த மருந்து தடுக்கும் என்று எதுவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

மனிதர்களை கொல்லும் கொடூர கொரோனா வைரஸ் பரவுவது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அளவில் பரவி வருகிறது.

தமிழகத்தில் 6 பேருக்கு

தமிழகத்தில் 6 பேருக்கு

இது கிட்டதட்ட இரண்டாம் கட்டம் ஆகும். மூன்றாம் கட்டமான சமூகத்துக்கே பரவுவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த நிலை தற்போது சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், ஜெர்மனி, தென்கொரியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. தமிழகததில் இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும 333 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வர வேண்டாம்

வீட்டை விட்டு வர வேண்டாம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்தி கொள்வதே ஒரே வழி என தமிழக பேரிடர் நிர்வாக துறை ஆணையர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசும், தமிழக அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இன்று வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்.

கை கழுவதல் வேண்டும்

கை கழுவதல் வேண்டும்

மேலும் இன்று மருத்துவமனைகளுக்கு தினசரி மருத்துவ பரிசோதனைகக்காக சென்று நர்ஸ், டாக்டர்களிடம் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாட்ஸ் அப் பேஸ்புக்கில் வரும் வதந்திகளை தடுக்க வேண்டும். கை கழுவதை கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து இதை நாம் கடைபிடிக்க வேண்டும். வைரஸ் பவுவதை தடுக்க தனிமைப்படுத்தி கொள்வதே ஒரே வழி.

தேவையற்ற பதற்றம்

தேவையற்ற பதற்றம்

சாலைகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இந்நோய் குறித்து விழிப்புணர்வு உள்ளது கொரோனா குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம். அதேநேரத்தில் அலட்சியாமாகவும் இருக்க வேண்டாம் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+