Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயிற்றெரிச்சல்.. காங். "பேராயுதம்".. அதை முதல்வர் ஆதரிக்கிறார்.. மீண்டும் ஸ்டாலின் மீது பாய்ந்த பாஜக

ராகுல் காந்தியின் பாராளுமன்ற பேச்சினை தமிழக பாஜக விமர்சித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்.. அதற்கு திமுகவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது... ராகுல் காந்தி வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார்" என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
"மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா" என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, பாஜக எந்த காலத்திலும், வாழ்நாளில் தமிழகத்தை ஆளவே முடியாது என்றும் ராகுல்காந்தி ஆவேசமாக பேசியிருந்தார்.

 அரசியலமைப்பு சட்டம்

அரசியலமைப்பு சட்டம்

மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை ராகுல்காந்தி பலமுறை வலியுறுத்தி, கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்துள்ளார்.. அவரது இந்த பேச்சை முதல்வர் ஸ்டாலினும் வரவேற்று கருத்து கூறியிருந்தார்.. ஆனால், பாஜக தலைவர்கள் அத்தனை பேரும் ராகுல் மீது பாய்ந்தனர்.. விமர்சித்தும், கண்டித்தும், குற்றஞ்சாட்டியும், புகார் கூறியும் வருகின்றனர். பாஜக அமைச்சர்கள் அனைவருமே ராகுலை விளாசி கொண்டிருக்கிறார்கள்.

 ராகுல்காந்தி

ராகுல்காந்தி

இங்கே தமிழகத்திலும் ராகுலை பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அந்த வகையில் பாஜகவின்
மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை பேராயுதமாக வைத்து பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் காந்தி முயல்கிறாரா என்று அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.. அதற்கு நாராயண் திருப்பதி விரிவாக ஒரு பதிலை தந்துள்ளார்.. அந்த பதிலை தன்னுடைய ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார். அவர் தந்த பதில் இதுதான்:

 பிளவு மனப்பான்மை

பிளவு மனப்பான்மை

"ராகுல் காந்தி நாடாளுமன்ற அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, எதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இந்தியாவில் நிர்வாக வசதிக்காகத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை உணராமல், தெரியாமல் பேசியிருக்கிறார்... 1947-ல் எப்படி இந்த நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்தியதோ அதே மனப்பான்மையோடு இப்போது ராகுல் பேசியிருக்கிறார். அதிகாரம் இல்லாமல் ஏழு ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இந்தப் பேச்சு காட்டுகிறது. அதனால்தான் பிரிவினையை விதைக்கும் சிந்தனையோடு ராகுல் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லியிருக்கிறது.. டாக்டர் அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது கூட புரியாமல் இருக்கிறார் ராகுல்.. கிட்டத்தட்ட 12 வருடங்களாக எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்... இப்போதுதான் காங்கிரஸ் கட்சி ஏன் அதலபாதாளத்துக்குச் சென்றது என்பது புரிகிறது. சரியான தலைமை காங்கிரஸுக்கு இல்லை என்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்தியிருக்கிறது. ராகுல் காந்தி தவறாகப் பேசிவிட்டார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதை முதல்வர் ஆதரிப்பதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் குரல் இந்தியர்களின் குரலாகத்தான் எப்போதும் ஒலித்திருக்கிறது. பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்.. திமுகவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது... ராகுல் காந்தி வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்தேவிட்டது... தமிழ்நாட்டில் திமுகவின் தயவில் ஏதோ சில இடங்களில் வெற்றி கிடைத்தது... அதுவும் பறிபோய்விடக் கூடாது என்ற வேகத்தில், பிடித்துக்கொள்ள ஒரு பிடிமானமாகத் திமுக அதுவும் கை நழுவிப் போய்விடக் கூடாதே என்றுதான் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கிறார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+