இனி ரயில் பயணிகள் புகார் தரும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.. திருநங்கைகளுக்கு போலீஸார் அட்வைஸ்
சென்னை: ரயில் பயணிகளிடம் இருந்து புகார் வரும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என திருநங்கைகளிடம் ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான திருநங்கைகள் நன்கு படித்துவிட்டு கவுரவமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நல்ல நிலையில் இருக்கும் திருநங்கைகள் அறக்கட்டளையை தொடங்கி கஷ்டத்தில் இருக்கும் திருநங்கைகளுக்கு உதவுகிறார்கள். கொரோனா, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு கூட இவர்கள் உதவிகளை செய்திருந்தனர்.

அது போல் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திருநங்கை, திருநம்பி என தெரியவந்தால் வீட்டை விட்டு அடித்து துரத்தாமல் கல்வியை கொடுக்க வேண்டும் என திருநங்கைகள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் முன்பை விட அவர்களுடைய வாழ்க்கை தரம் ஓரளவு உயர்ந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.
இப்படி மகிழ்ச்சிகரமான பக்கங்கள் இருந்தாலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைகள், கோயில்களில் சில திருநங்கைகள் பொதுமக்களிடமும் பயணிகளிடமும் பணம் கேட்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது போல் பணம் கேட்கும் போது இரு வேறு விதமான பிரச்சினைகள் எழுகின்றன.
ஒன்று பணம் இல்லை என சொன்னால் சில திருநங்கைகள் அசிங்கமாக பேசுவதும் தாக்குதலில் ஈடுபடுவதுமான செயல்களை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அது போல் மீண்டும் மீண்டும் பணம் கேட்கும் திருநங்கைகளை பொதுமக்களும் பயணிகளும் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களால் தாக்குதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், சில சமயங்களில் பயணிகளிடம் அத்துமீறி நடந்துக் கொள்வதாகவும் இருப்புப்பாதை காவல் உதவி மையத்துக்கு அடிக்கடி புகாா்கள் வந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன் மீஞ்சூா் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தாா். திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற திருநங்கையின் கால் துண்டானது. சங்க உறுப்பினா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனி இதுபோன்ற புகாா்கள் ஏதும் வராமல் பாா்த்துக்கொள்ள வலியுறுத்தினாா். தொடா்ந்து புகாா்கள் வரும் பட்சத்தில் அவா்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications