சென்னை அண்ணாநகர் டாஸ்மாக் கடை அருகே போராட்டம்.. ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேர் கைது
சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க மத்திய அரசு தளர்வு வழங்கியதை அடுத்து தமிழக அரசும் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னையிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கொரோனா குறையாத நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்ன அவசியமா என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்த நிலையில் கடைகள் இன்று திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா போராட்டம் நடத்தினார்.
மேலும் மதுவுக்கு எதிராக பிரசார ஊர்வலத்தையும் அவர் நடத்தினார். சென்னை அண்ணா நகர் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறுகையில் கொரோனா ஊரடங்கால் இத்தனை நாட்களாக ஊதியம் இல்லாமல் மக்கள் தவித்து வந்தார்கள்.
தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி மக்கள் பணிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அவசர அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னை சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும் என ராஜேஸ்வரி பிரியா தெரிவித்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications