சென்னை அண்ணாநகர் டாஸ்மாக் கடை அருகே போராட்டம்.. ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேர் கைது
சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க மத்திய அரசு தளர்வு வழங்கியதை அடுத்து தமிழக அரசும் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னையிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கொரோனா குறையாத நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்ன அவசியமா என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்த நிலையில் கடைகள் இன்று திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா போராட்டம் நடத்தினார்.
மேலும் மதுவுக்கு எதிராக பிரசார ஊர்வலத்தையும் அவர் நடத்தினார். சென்னை அண்ணா நகர் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறுகையில் கொரோனா ஊரடங்கால் இத்தனை நாட்களாக ஊதியம் இல்லாமல் மக்கள் தவித்து வந்தார்கள்.
தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி மக்கள் பணிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அவசர அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னை சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும் என ராஜேஸ்வரி பிரியா தெரிவித்தார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications