2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி
Recommended Video
சென்னை: 2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு முன்பே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.
இந்த நிலையில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளிக்கையில் நாங்கள் இருவரும் தேவைப்படும் நேரத்தில் அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என தெரிவித்துள்ளனர்.
கோவாவில் விருது
இதை மற்ற கட்சிகள் கிண்டல் செய்து பேசின. இருவரும் வேறு வேறு சித்தாந்தங்களை முன் வைத்து வருகின்றனர். இவர்களுக்கிடையே எப்படி ஒத்துபோகும் என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கோவாவில் சிறப்பு விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
தமிழக மக்கள்
இதையடுத்து கோவாவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் நான் கோவாவில் விருது வாங்கியதற்கு தமிழக மக்கள்தான் காரணம். நான் வாங்கிய சிறப்பு விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கட்சி உறுப்பினர்கள்
கமலுடன் இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில், சூழலை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. மேலும் நான் தொடங்கும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்து பேசி எடுக்கப்படும். அப்போது சொல்கிறேன். இப்போது பேச விரும்பவில்லை என்றார்.
ரஜினிகாந்த
திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, 2021-இல் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என்றார் ரஜினிகாந்த்.