ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு நிச்சயம் கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன் உறுதி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவார் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை இன்று தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க சந்தித்தேன். ரஜினிகாந்த் எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராயக் கூடியவர்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ல் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாக சாத்தியம் இல்லை. நிச்சயமாக அடுத்த ஆண்டு அவர் அரசியல் கட்சியைத் தொடங்குவார். ரஜினிகாந்த் எப்போதும் அரசியல் விஷயங்களைத்தான் பேசி வருகிறார்.
என்னுடைய கருத்துகளுக்கும் ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்புமே இல்லை. இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.












Click it and Unblock the Notifications