'மன்னித்துவிடுங்க'.. "விடியாமலேயே விடியல்".. ஸ்டாலினுக்கு எதிராக கடும் கோபத்தில் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இதுவரை முதல்வர் முடிவெடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, கடுமையான பதிவினை ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்று வெளியிடப்பட்டன.. பீகார் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 27.12%; பட்டியல் சாதி - 19.65%; இடஒதுக்கீடு இல்லாத உயர் சாதியினர் - சுமார் 15.52%, பட்டியல் பழங்குடி மக்கள் - 1.68% ஆகும். முஸ்லிம்கள் - 17.7%, கிறிஸ்தவர் - 0.05%l, பௌத்தர்கள் - 0.08%, சீக்கியர்கள் - 0.01% ஆகும்.

Ramadoss angry post against CM MK Stalin due to caste-wise census delay in TN

பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களே அதிகம் இருப்பதால் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பீகார் மாநிலத்தை போல் ஒடிசாவும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளது.

ஒடிசா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் (OSCBC) இந்த ஆண்டு மே மற்றும் ஜூலை இடையே மிகப்பெரிய கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. ஒடிசா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி ஒடிசாவில் உள்ள 4.7 கோடி மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர், மாநிலத்தில் உள்ள 208 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கூறப்படுகிறது. விரைவில் முழு விவரத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

இதேபோல் கர்நாடகாவும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. ஒராண்டிற்குள் முடித்து சாதி வாரியாக மக்கள் விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது. கர்நாடகா, பீகார், ஒடிசாவில் செய்யப்பட்டது போல் சாதி வாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்து வருகிறார். இதுவரை அரசு ஒப்புதல் தரவில்லை. இந்நிலையில் ராமதாஸ் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்"நாங்கள் அறியாமல் பிழை செய்து விட்டோம், எங்களை மன்னித்து விடும்" என்பது தான் பிகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கர்நாடகம், ஒதிஷா மாநிலங்களின் முதலமைச்சர்களும் தினமும் உதிர்த்துக் கொண்டிருக்கும் சொற்களாம்.
மாம்.... ஒற்றைக் கடிதத்தில் சமூகநீதியை பாதுகாப்பதை விடுத்து, கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, லட்சக்கணக்கில் அரசு ஊழியர்களை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான பக்கங்களில் அறிக்கைகளை தயாரித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறோமே? என்பது தான் அவர்களின் கவலையாம். அதானே... எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..... விடியாமலேயே விடியல் தருவதற்கு?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+