செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்!
சென்னை: தருமபுரி தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடும் செளமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பை எப்படி செளமியா அன்புமணி சமாளிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கிறது. அதிமுக - பாமக கூட்டணிக்கு வடமாவட்டங்களில் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், களம் இன்னும் சூடாகியிருக்கிறது. ஏனென்றால் ராமதாஸ் தரப்பு பாமக வேட்பாளர்கள் களப்பணியை தொடங்கி இருக்கின்றனர். இந்த தேர்தலில் பாமக ராமதாஸ் தரப்பில் 38 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அன்புமணி தரப்பு பாமகவை எதிர்த்து நேரடியாக 12 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணியை எதிர்த்து சரவணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் பாமகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளர். அதேபோல் சேலம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ அருள், ஜெயங்கொண்டம் தொகுதியில் ரவி, செஞ்சி தொகுதியில் கனல் பெருமாள் சவால் அளிப்பார்கள் என்று தெரிகிறது.
அதேபோல் இம்முறை பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில் அந்த வேட்பாளர்களை தோற்கடிப்பதே ராமதாஸ் தரப்பின் நோக்கமாக உள்ளது. அதற்கேற்ப ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்ட உள்ளார். ஏப்ரல் 11ல் தொடங்கும் ராமதாஸ் பிரச்சாரம், ஏப்ரல் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் கும்பகோணம், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இறுதியாக தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்புமணிக்கு ஆதரவாக இருந்தாலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ராமதாஸ் ஆதரவுடனே இருக்கின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ராமதாஸ் ஏதோ ஒரு மேடையில் கண்கலங்க வாய்ப்புகள் உள்ளதாக உடனிருப்பவர்கள் பேசுகின்றனர்.
அது ராமதாஸ் மீது அனுதாப அலை வீசுவதற்கு காரணமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ராமதாஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை செளமியா அன்புமணியால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் செளமியா அன்புமணி தோல்வியடைந்துவிட்ட சூழலில், இம்முறை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
-
சவுமியா, அன்புமணி போட்ட 2 பிளான்.. பென்னாகரம் 2026-ல் தமிழ்க்குமரனுக்கு காத்திருக்கும் அந்த 1 ஆபத்து -
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கும்.. சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications