தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அடுத்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகம் வருகை தர உள்ளார்.

ராமதாஸ் மனு
அதன்பிறகு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும். அநேகமாக மார்ச் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க..
அதில், ‛‛தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டால் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுத்தாக்கலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தற்போது பாமக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
பின்னணி என்ன?
ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. அன்புமணி ராமதாஸ் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார். ராமதாஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் இருவரும் நாங்கள் தான் உண்மையான பாமக என்று கூறி வந்தனர். இதற்கிடையே தான் அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவின் சின்னமான மாம்பழம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் ஆணையம் சொன்ன பதில்
அந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் தங்களிடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணி தான் பாமகவின் தலைவர். அன்புமணி ராமதாஸ்க்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும்'' என்று விளக்கமும் அளித்தது.
இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பாமகதலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்க வேண்டும் என்று ராமதாஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications