ஆஹா... ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்களே.. இதெல்லாம் என்ன? ராமதாஸ் கேள்வி!
சென்னை: கேரளத்தில் 25,000 காவலர்களின் வாக்குகளை சட்டவிரோதமாக ஆளும் கட்சி போட்டுக்கொண்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான் என தெரியவந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 'கேரளத்தில் 25,000 காவலர்களின் வாக்குகளை சட்டவிரோதமாக பறித்து தங்களுக்கு பதிவிட்டுக் கொண்ட மார்க்சிஸ்ட் கூட்டணி: செய்தி - ஆஹா... ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்கள் தங்கள் கோட்டையை தற்காத்துக் கொள்ள செய்வதெல்லாம் முறைகேடுகள் தானா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளத்தில் 25,000 காவலர்களின் வாக்குகளை சட்டவிரோதமாக பறித்து தங்களுக்கு பதிவிட்டுக் கொண்ட மார்க்சிஸ்ட் கூட்டணி: செய்தி - ஆஹா... ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்கள் தங்கள் கோட்டையை தற்காத்துக் கொள்ள செய்வதெல்லாம் முறைகேடுகள் தானா?
— Dr S RAMADOSS (@drramadoss) May 10, 2019
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications