திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி.. பிரச்சனையை தூண்டுகிறார் நவாஸ் கனி.. கொந்தளிக்கும் அண்ணாமலை!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீது அமர்ந்து பிரியாணி சாப்பிடுவதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். நவாஸ் கனியின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அண்ணாமலை, இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த சில மாதங்களாக கந்தூரி கொடுக்க தடை காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி போன்ற உயிர்ப்பலி கொடுக்க கூடாது என்று இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆய்வு நடத்தினார். அதேபோல் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜக தலைவர்கள், இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இந்துக்கள் மனதை புண்படும் வகையில் நவாஸ் கனியின் செயல்பாடுகள் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போன்ற செயல்கள் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவரின் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை சம்பவம் தொடர்பான கேள்விக்கு, சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கணிம வளங்கள் திருடப்படுவது தெரிய வந்துள்ளது. லாரியால் மோதிவிட்டு, பின்னர் மீண்டும் பின் சென்று 2, 3 முறை மீண்டும் லாரியால் ஏற்றியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உள்ளதை வரவேற்கிறேன். இதை சாதாரண சாலை விபத்து வழக்காக பார்க்காமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, டங்கஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று டங்கஸ்டன் சுரங்கம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடி தமிழ் நாடு மக்களுடன் எப்போதும் நிற்பார் என்று தெரிவித்தார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications